கலப்பின ரகங்களின் இனப்பெருக்க முறைமை மாற்றமும், அதன் உபயோகமும்

மார்ச் 20, 2008

ஒட்டுப் போடுவதன் மூலமாக, பயிர்களில், நமக்குத் தேவையான பண்பும் குணமும் உள்ள ரகங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது பொது அறிவு; உதாரணமாக, அத்தகைய கலப்பின ரகங்கள், பொதுவாக, நல்ல மகசூல் தருபவையாகவோ, அல்லது, நல்ல புழு மற்றும் பூச்சி எதிர்ப்புத்தன்மை உடையவையாகவோ, அல்லது, உயர் ரக பழம் அல்லது பூ தருபவையாகவோ இருக்கும். ஆனால், அத்தகைய, நமக்குத் தேவையும், பிடித்தமுமான இரு கலப்பின ரகங்களை ஒட்டுப்போட்டு, அவற்றை விடவும் உயர்ந்த ரகங்களை, இப்போதைக்கு நம்மால் உருவாக்க முடியாமல் இருந்து வருகிறது.
சமீபத்தில், ஹைதராபாதில் உள்ள செல் மற்றும் மூலக்கூற்றறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த விஞ்ஞானி டா. இம்ரான் சித்திக்கி மற்றும அவரது உடனுறை விஞ்ஞானிகள், கலப்பின ரகங்களின் இந்தக் குறைப்பாட்டை, அவைகளின் (ஜீன்களை மாற்றுவதன் வழியாக) இனப்பெருக்க முறைமையை மாற்றி, கட்டுப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்திருப்பதாகக் கேள்வி. இன்றைய ஹிண்டு பத்திரிக்கையில, பாலசுப்ரமணியன் அவர்கள் இந்த ஆராய்ச்சியைப் பற்றியும், அது சம்பந்தமான நுணுக்கங்களைப் பற்றியும், தெளிவாகவும், விலாவரியாகவும் எழுதி இருக்கிறார் — ஒரு பார்வை பார்த்துவிட்டு வாருங்களேன்.

Entry Filed under: தாவரவியல், விவசாயம். .

1 Comment Add your own

  • 1. vivek  |  ஏப்ரல் 12, 2008 at 7:06 பிற்பகல்

    sir pls write about கிளமிடமொனாசு….

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Calendar

மார்ச் 2008
தி செ பு வி வெ ஞா
« ஏப்    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Most Recent Posts